Saturday, August 3, 2013

குரூரத்தின் எல்லை

காலையில் படித்த இந்த செய்தியால் வெகுவாக பாதிக்கப்பட்டேன்.


அமெரிக்காவின் கிளைவ்லேண்டில், ஏரியல் காஸ்ட்ரோவிற்க்கு ஆயுள் தண்டனையும், கூடவே 1000 வருட கடுங்காவலும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று பெண்களை 2002 வாக்கில் கடத்தி, 12 வருடங்களாக தனது வீட்டின் அடித்தளத்தில் சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தான் இவன். நினைத்தபோதெல்லாம் பாலியல் பலாத்காரம், அடி உதை, பட்டினி என்று சித்ரவதை. எண்ணற்ற முறை கர்ப்பம், அதை கலைக்க, வயிற்றில் குத்துவது, தப்பிக்க நினைத்த பெண்ணுக்கு தண்டனை, வார கணக்கில் மோட்டர் சைக்கிள் ஹெல்மெட் அணிந்து அந்த பேஸ்மெண்டில் கிடக்க வேண்டும் என இந்த மிருகம் செய்த கொடூரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்படி இவன் கடத்திய பெண்களின் வயது என்ன தெரியுமா? 14, 16, 20. இந்த உலகத்தையே தமது கழகு பார்வையால் கவனித்து கொண்டிருக்கிறோம் என்று புளங்காகிதம்படும் அமெரிக்காவால் 12 வருடங்களாக, கடத்தப்பட்ட பெண்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதில் கேலிகூத்தே, இந்த பெண்கள் அனைவரும், தமது வீடுகளில் இருந்து ஒரு சில கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இறுதியாக மே 6 அன்று, இவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து, ஒரு பெண் கதவை உடைத்து வெளியே ஓடுகிறாள். பக்கத்து வீட்டுகாரரிடம் சென்று கதறிய உடன், அவர் போலிஸை அழைத்து, அனைவரையும் மீட்கிறார். 

அந்த பெண்களை காப்பற்றிய பக்கத்து வீட்டுகாரரை, தொலைகாட்சிகள் மொய்க்கின்றன. அந்த தோழன் சொல்கிறான், என்னை போன்ற ஒரு கறுப்பு இன நபரிடம், ஒரு வெள்ளை இளம்பெண் ஓடி வந்து, கட்டிகொண்டு கதறுகிறாள், என்றால் ஒன்று அவள் யாருமற்ற அனதையாக இருக்க வேண்டும். அல்லது அவள் மனநிலை சரியில்லாதவளாக இருக்க வேண்டும். எனவே அந்த பெண் முதலில் வந்து அப்படி கதறிய போது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

என் மனம் எதனால் பாதிக்கப்பட்டது என்று சரியாக சொல்ல தெரியவில்லை.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..