Saturday, January 5, 2013

ரஜினியின் புரிதலும், சாதியமும் !


கருணாஸ் பேசுனதை பார்க்கும்போது, அந்த முத்துராமலிங்க தேவரே பேசுனது மாதிரி இருந்துச்சு என்றார் ரஜினி அவரது பிறந்த நாள் விழாவில்.


அப்படி என்னடா கருணாஸ் பேசிவிட்டார் என்று மண்டையே உடைந்துவிடும் போல் இருந்தது எனக்கு. தேடி ஒருவழியா யூடீயுபில் பிடித்து விட்டேன்.


அண்ணாதுரை ஐந்தெழுத்து, கருணாநிதி ஐந்தெழுத்து, ஜெயலலிதா ஐந்தெழுத்து, ஆக அடுத்து ஆளப் போகும் ரஜினிகாந்த் ஐந்தெழுத்து இல்லையே என்று யோசிக்காதீர்கள். ரஜினிகாந்தின் நிஜ பெயர் சிவாஜிராவ் ஐந்தெழுத்துதான்.. 

என்ன பார்க்கிறீர்கள்? இதுதான் நடிகர் கருணாஸ், ரஜினியின் பிறந்தநாள் விழாவில் பேசியது. இதற்க்கும் முத்துராமலிங்க தேவருக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமும் இல்லை.. கருணாஸ் முக்குலத்தைச் சேர்ந்தவர் என்பதை தவிர..இப்படி தொடர்ந்து ரஜினி சாதிவழியாகத்தான் தமிழகத்தையே பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது. முன்பு ஒரு முறை, நடிகர் விவேக்கை பாராட்டி பேசும் போது, ”முதல்லே விவேக்கோட அறிவை (?) பார்த்து வியந்து, அவர் பிராமின்னாதான் இருக்கனும்ன்னு நினைச்சேன், பின்புதான் தெரிந்தது அவர் முக்குலத்து சாதியை சேர்ந்தவர் என்பது” என்று திருவாய் மலர்ந்தார், சூப்பர் ஸ்டார். (இதற்க்கு சேதுராமன் குழுவினர் மல்லுக்கட்டியது தனி காமெடி)..

இப்படிபட்ட புரிதல்கள் கொண்ட, சாதி லட்சணங்களை நம்பும் ஒரு முற்ப்போக்கான ஒரு தலைவருக்காகத்தான் தமிழகமே, கன்னத்தில் கை வைத்துக் காத்து கிடக்கிறது. காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காவி உடை நீ கொண்டால் என்னவாகும் மனது??

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..